முதியோர் கற்பம்
வயதான பின்பு மலச்சிக்கல், பசியின்மை, தலைச்சுற்று, வாயுத் தொந்தரவு, தூக்கமின்மை, போன்ற பிணிகள் சாதாரணமாக ஏற்படக் கூடியதாகும். இவைகளை நீக்குவதற்கும் உணவு ரீதியிலான வயிற்று நோய்களை வராமல் தடுப்பதற்கும் சித்தர்கள் சிறந்ததொரு முதுமை வராது காக்கும் காயகற்ப மருந்தினைக் கூறி சென்றுள்ளார்கள்.
How I Improve My TO BE YOUNG In few Days
காலையில்......
இஞ்சி தேவையான அளவு எடுத்துக் கொண்டு (2 கிராம்) காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்த பின்பு உண்ண வேண்டும். நன்கு சுவைத்து உண்பது மிகவும் நல்லது. இதனால் தலைச்சுற்றல், வாயுப்பிணிகள், மற்றும் கபப்பிணிகள் வராது காக்கும். பசி அதிகப்படும். பித்த நோய்கள் வராது காக்கும்.
மதியம்.....
சுக்கு தேவையான அளவு எடுத்து (1-2 கிராம்) மேற்தோல் நீக்கி நன்கு பொடி செய்து மதியம் உணவு உண்டபின் நீரில் பருக வேண்டும். இதனால் அஜீரணம் வராது உடலை வாத நோய்கள் வராது காக்கும்.
மாலை (இரவு)
கடுக்காய்த்தோல் நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு படுக்கும் பொழுது 5 கிராம் வரை வெந்நீரில் உட்கொள்ள வேண்டும். இதனால் மலம், எளிதில் கழியும். வாத, கபப் பிணிகள் தோன்றாது.
குறிப்பு:
மேற்கண்ட மருந்துகளை அவரவர் உடல் நிலைக்குத் தக்க தினசரி தவறாது உண்டு வந்தால் உடலை நோய் இல்லாமல் காக்கலாம். நீர் (அ) வெந்நீரில் உட்கொள்ள முடியாதவர்கள் தேனில் கலந்து உட்கொள்ளலாம். மேற்கண்ட மருந்தகதூளில் முதியோர்களுக்குத் தேவையான அனைத்துச் சத்துப் பொருட்களும் அடங்கியுள்ளன. மருந்தாகக் கொள்ளாமல் உணவாகக் கருதி உட்கொள்ளலாம் மேலும் சந்தேகங்களுக்கு மருத்துவர்களை நாடலாம்.
https://www.youtube.com/channel/UCss41xLNuQxcxr4JXClbkCw?view_as=subscriber
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக