பால் குடிக்கும் போது How To Make When Drinking Milk
பால் குடிக்கும் போது How To Make When Drinking Milk நம்மிடையே உள்ள அடுத்த மிகப்பெரிய அறியாமை பாலை பற்றியது. வெண்மை புரட்சி என்ற பெயரில் நம் அறிவார்ந்த விஞ்ஞானிகள் செய்த பெரிய சீர்கேடு இன்று பாக்கெட்டில் வரும் பால், பால் என்ற உணவு தாயின் மடியில் இருந்து குழந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டிய ஒரு உணவு மனிதனை தவிர எந்த ஒரு உயிரினமும் இரண்டு வருடத்திந்த மேலாக பால் அருந்துவதில்லை . மேலும் எந்த உயிரினமும் மற்ற ஒரு விலங்கின் பாலை அருந்துவதில்லை. பண்டைய காலத்தில் கன்றுக்கு எஞ்சிய பால் தயிராகவும், மோராகவும், வெண்ணையாகவும் மட்டுமே பெரிதும் பயன்பட்டது. நம் நாட்டு பசுவிடம் ஒன்றரை லிட்டர் பால் கிடைப்பதே அரிது.
மேலும் கன்றின் பாலை கவரும் துர்மதி நமக்கு இருந்ததில்லை. ஆனால் இன்று மனிதனின் பேராசையின் விளைவாக பன்றியின் ஹார்மோன் சேர்க்கப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட பசுக்களை எங்கும் காணப்படுகிறது. இவை அனைத்தும் பசு போர்வையில் இருக்கும் பிசாசுகள். பல லிட்டர் பால் என்பதற்காக ஆக்சிடோஸின் (Oytocin) போன்ற பட்டு பால் உருவாக்கப்படுகிறது. மிக எளிதில் வேண்டும் என்பதற்காக ஆக்சிடோஸின் கெட்டுப் போகக்கூடிய குணம் கொண்ட வருப்பதற்காக இரசாயனங்கள் சேர்க்கப்பட்டு,பதப்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் நுரை வருவதற்காகவும், கெட்டியாக இருப்பதற்காகவும் கேடு விளைவிக்கும் யூரியா, வெண்மையாக்கும் இரசாயனம் (Bleaching Powder) போன்றவை சேர்க்கப்பட்டு நம்மை வந்தடைகிறது.
இதை பச்சிளங்குழந்தைகள் முதல் பாட்டி வரை அனைவருக்கும் ஊட்டச்சத்தான உணவு என நினைத்து கொடுக்கிறோம். பால் ஒரு முழுமையான உணவு என்று அடிக்கடி வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகிறோம். பால் அருந்த வேண்டாம் என யாராவது கூறினால் உடனே நம் மூளைக்கு தோன்றுவது ஒன்றே ஒன்று தான். பால் குடிக்காவிட்டால் கால்சியம் எங்கிருந்து கிடைக்கும்? நம்முடைய அறிவிற்கு கால்சியம் பற்பசையிலும் பாலிலும் மட்டும் தான் இருக்கிறது. விளம்பரங்களில் காட்டப்படுவது போல பற்பசையினால் கால்சியம் நம் பற்களில் ஒட்டிக்கொள்ளும் என நினைப்பது நமது அறியாமை. இதில் வியப்பு என்னவென்றால் சிறிதும் விஞ்ஞானம் இல்லாத இந்த கருத்தை மருத்துவர்கள் வந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் பரிந்துரைப்பார்கள். நம் குழந்தை பருவத்தில் பல்துலக்கிய கரியும், வேப்பங்குச்சியும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றத்தை மூன்றே நிமிடத்தில் போக்கவல்லது இந்த கரி. நம்மை முட்டாளாக்கிவிட்டு இப்போது உங்கள் பற்பசையில் கரி இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.
சரி, ஒரு லிட்டர் பாலில் எத்தனை கால்சியம் இருக்கிறது என்று கேட்டால் நம்மிடம் பதில் இருக்காது. உண்மை என்னவென்றால் ஒரு லிட்டர் சுத்தமான நாட்டு மாட்டு பாலில் 1 கிராம் கால்சியம் மட்டுமே உள்ளது. அதிலும் நமது உடல் கிரகித்துக் கொள்ள கூடியது வெறும் 160 மில்லி கிராம் மட்டுமே. நன்றாக சிந்தித்து பாருங்கள். நாம் குடித்ததை விட பல மடங்கு பால் இன்றைய குழந்தைகள் குடிக்கிறார்கள். நம்மை போல் அல்லாமல் கால்சியம் நிறைந்த பற்பசையில் தான் ஒன்றிற்கு இரண்டு முறை பல் துலக்குகிறார்கள். ஆனால் ஒரு கொய்யா பழத்தை கடித்து தின்ன கூட அவர் பற்களில் வலு இல்லையே?
பாக்கெட்டில் வரும் பாலை குடிப்பதால் நம் குழந்தைகளின் பற்கள் மட்டும் பாழாகவில்லை. பெண் குழந்தைகளின் இயற்கை சுழற்சியே இதனால் பாழ்பட்டு போனது. பசுவிற்கு கொடுக்கப்பட்ட ஊக்க மருந்துகள் பாலின் வழியாக நம்மையும் வந்து அடைகிறது. இதன் காரணமாகவே பெண் குழந்தைகள் மிக சிறிய வயதில் பூப்படைகின்றனர். 15 வயதில் பூப்படைவது இயற்கையாக இருந்தது. இன்று 8 வயதிலேயே பெண் பூப்படைகின்றனர். இது நோய் அல்ல. நாம் இயற்கையாக மாற்றி விட்டோம். இது தான் நம் விஞ்ஞானத்தின் வியப்பூ இதோடு சிக்கல் நின்று விடவில்லை. இந்த பால் - கர்ப்பப்பை கோளாறுகள், ஹார்மோன் குறைபாடுகள், மாதவிலக்கு போன்றவையும் ஏற்படுகின்றது. பாலினால் பெண் குழந்தைகளுக்கு தான் தொல்லைகளா என எண்ண வேண்டாம் ஆண்களுடைய மலட்டு தன்மைக்கு இது ஒரு காரணியாகும் இன்னும் சிலருக்கு பாலில் தான் குழந்தைக்களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் இருப்பதாக எண்ணம் உள்ளது. ஒருவகையில் அதில் சிறிது உண்மையும் உள்ளது. ஆறு மாதத்தில் நம் குழந்தைகள் வளர்வதற்கும் ஒரு கன்றுக்குட்டி வளர்வதற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது. கன்றுக்குட்டி ஆறு மாதத்தில் நூறு கிலோ எடையை அடையும்.
நாம் நம் குழந்தைகள் மாடு போல் வளர விரும்புகிறோமா என்ன? இப்பொழுது வேடிக்கையான விளம்பரம் ஒன்றை காணலாம். உங்கள் குழந்தைகளுக்கு பாலின் அனைத்து சத்தும் சென்று சேரவில்லையா? பாலில் உருவான, சத்துக்கள் நிறைந்த பனீர், சீஸ் வாங்கி கொடுங்கள் என்று. பாலை விரும்பாத குழந்தைகளும் இதனை விரும்பி நிறைய சாப்பிடுகிறார்கள். பால் வணிகமும் ஆயிற்று, அதனை தொடரும் நோய்களின் வணிகமும் ஆயிற்று. இது தான் ஒரு கல்லில் இரண்டு மாங்காயோ? உண்மையில் பாலின் அடுத்த பரிணாமமே இவை அனைத்தும். பால் பொருட்களை அதிகம் உட்கொள்ளும் வியட்நாம் போன்ற நாடுகளில் தான் எலும்பு தேய் மான பிரச்சனை அதிகம். செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த பாலை பருகுவதால் சிறுநீரக பாதிப்புகள், எலும்பு முறிவு மற்றும் புற்று நோய் கூட வர வாய்ப்பிருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்று சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது மட்டுமல்லாமல் நோய் ஏற்படும் வயது குறைந்து குழந்தைகளும் நோயாளி ஆவது தான் அபாயத்தின் அறிகுறி. இன்று நமக்கு அனைத்திற்கும் மாத்திரை தேவைப்படுகிறது. மலம் கழிக்க, பசி எடுக்க, தூக்கம் வர, தாம்பத்தியம் கொள்ள, குழந்தை பெற்றுக் கொள்ள போன்ற இயற்கையான விஷயங்களுக்கும் மாத்திரைகளும் அறுவை சிகிச்சைகளும் தேவைப்படுகிறது. பெங்களூரில் ஆயிரம் கணிப்பொறி வல்லுநர்களை பரிசோதித்தபோது வெறும் மூன்று பேருக்கு மட்டுமே 50 மில்லியனுக்கு அதிகமான விந்தணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பெண்களுக்கு மாதவிலக்கு மற்றும் கர்ப்பப்பை பிரச்சனைகள், ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு. இப்படி இருந்தால் குழந்தை எப்படி பிறக்கும்? இன்றே இப்படி இருந்தால் வரும் சந்ததிகளின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க முடியுமா? ஜெர்மனியில் இந்த நிலை ஏற்கனவே உருவாகிவிட்டது. குழந்தை இல்லாத தம்பதிகளே அங்கு அதிகம். அங்கு குழந்தை பெற்றுக்கொண்டால் அரசாங்கம் அனைத்து சலுகைகளும் வழங்குகிறது. ஏனென்றால் அங்கு குழந்தை பிறப்பதே அரிதாகி விட்டது. இங்கும் வீதிக்கு வீதி செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவானதற்கு இயற்கைக்கு மாறாக தயாரிக்கப்படும் பால் ஒரு முக்கிய காரணியாகும்.
நிஜம் என்னவென்றால் பால் கன்றின் முழுமையான உணவு. நம்மிடம் பாலை விடநன்மை தரக்கூடிய நிறைய பொருட்கள் உள்ளன. 100 கிராம் எள்ளில் ஒரு லிட்டர் பாலுக்கு சமமான கார் அடங்கியுள்ளது. ஒரு பிடி எள்ளை ஊற வைத்து பால் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து குடித்தால் சத்து மிகுதியாகவே கிடைக்குமே. இதை போல் நிலக்கடலை பால் செய்யலாம். நிலக்கடலையை ஒரு இரவு ஊற வைத்து முளை கட்டியும் பால் எடுக்கலாம். இது மட்டுமன்றி தேங்கா பாலில் அடங்கிய சத்துக்கள் ஏராளம். தேங்காய் பாலுடன் கருப்பட்டி கலந்து பருகினால் அது காயகல்பம் போல உடம்பை உறுதியாக்கி நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். இதனுடன் புதினா, கறிவேப்பிலை, கேரட், பீட்ரூட் என எதோ ஒன்றை சேர்த்து தினமும் ஒரு வண்ணத்தில் பாலை கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்களே?
நிலக்கடலை பால்
கறிவேப்பிலை கீர்
தேங்காய் பால்
பீட்ரூட் கீர்
கேரட் கீர்
மேலும் ராகி, தினை போன்ற தானியங்களை ஊறவைத்து பால் எடுத்தும் பருகலாம். இவை அனைத்துமே உண்மையான சத்துபானங்கள். தானியங்களில் இருந்து பெறப்படும் பாலை சூடாக பருக விரும்பினால் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணர் ஊற்றி அதனுள் ஒரு பாத்திரத்தில் இந்த பாலை வைத்து குடு செய்யலாம். நேரடியாக சூடேற்றகூடாது.
இன்றைய நவீன தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க நேரமோ மனமோ இல்லாமல் போவது வேதனைக்குரிய விசயம் பால் கொடுப்பதன் மூலம் அழகு குறைவதல்லை. மாறாக பாலூட்டும் அன்னையர் புற்று நோயிலிருந்து தப்பமுடியும். ஊட்டச்சத்து குறைபாட்டினால் பால் சுரக்காவிட்டால் பால் பவுடர்களை நாடாமல் பாலை அதிகரிக்கும் வழிகளை மேற்கொள்ள வேண்டும். நம் அன்றாட உணவில் இருந்து இந்த பால் பொருட்களை நீக்குவதே நாம் ஆரோக்கியத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக