நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் drinking 4 litres of watter a day benefits
நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் drinking 4 litres of watter a day benefits
நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் drinking 4 litres of watter a day benefits உயிர் வாழ்க்கைக்கு நீர் பருகுவது முற்றிலும் அவசியமானது. நீர் பருகாது மனிதன் ஒருவன் இரண்டு நாளுக்குமேல் உயிர் வாழ்ந்திருக்க முடியாது. நீரில் நோயை உண்டுபண்ணும் நச்சுக்கிருமிகள் பல உருவெடுப்பது உண்டு. ஆதலால் தண்ணீரை முதலில் கொதிக்க வைத்துப் பிறகு ஆற்றிக் குடிப்பது உத்தமம். உட்கொண்ட நீர் உடலுக்கு நன்கு பயன்படுகிறது. பிறகு மூத்திரமாக மாறி அது வெளியாகிறது. நாளொன்றுக்கு சுமார் ஐந்து தடவை சிறுநீர் கழித்தல் இயற்கையின் அமைப்பு. மழைக்காலத்தில் பல தடவை சிறுநீர் கழிப்பதும் இயல்பு. நெடுநேரம் மூத்திரத்தை அடக்கி வைத்திருக்கலாகாது. அப்படிச் செய்தால் நேத்திரத்துக்கு அது கேடாக முடியும்; வேறு பல நோய் களுக்கு அது காரணமாகும்.

drinking 4 litres of watter a day benefits
நன்னீரை இடையிடையே உட்கொள்ள வேண்டும். ஆனால் உணவு உண்பதற்கிடை யில் நீர் பருகுவது பொருந்தாது. உணவு உண்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே நீர் அருந்துவதை நிறுத்தி விடவேண்டும். உணவு அருந்தி அரைமணி நேரத்திற்குப் பின்பு நீரை வேண்டியவாறு பானம் பண்ணலாம். உடலில் அமைகிற சிறுநீரை அப்போதைக்கப்போது வெளிப்படுத்துவது உடல் நலனுக்குற்ற உபாயமாகும். எவ்வளவுக்கெவ்வளவு தேகம் ஆரோக்கியமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ் வளவு மூத்திரத்தின் துர்நாற்றம் மிகக் குறைவாக இருக்கும்
இனி மூத்திரத்தைப் பற்றிய கோட்பாடு ஒன்று உளது. அவரவர் மூத்திரத்தை அவரவரே நாளொன்றுக்கு ஒரு தடவை சிறிது பருகுவதால் பல நோய்கள் குணமடைகின்றன என்பது கோட்பாடு.
இப்பழைய கொள்கையை இன்றைக்கும் பலபேர் கையாண்டுபார்க்கின்றனர். அதில் குணம் இருக்கிறதென்றும் அவர்கள் பகர்கின்றனர். பாண்டு நோய், மூத்திரம் அடைப்பு, காசம் முதலியவைகளை அது குணப்படுத்துகிறது என்கின்றனர். இது ஆராய்ச்சிக்குரிய விஷயமாகும் கால்நடைகளும் ஏனைய சில விலங்குகளும் இடையிடையே தான் கழிக்கின்ற சிறுநீரை அருந்துவதைக் காணலாம். ஒருவேளை இது இயற்கையில் அமைந்துள்ள சிகிச்சை முறையாக இருக்கலாம். உடலை ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பதற்கு ஆகார நியதி முற்றிலும் அவசியமானது. ஆகாரத்தின் வாயிலாகவே உடல் வாழ்க்கை நிலைபெற்று வருகிறது.
உணவு உண்ணாது சில வாரங்களுக்குமேல் மனிதன் உயிர் வாழ்ந்திருக்க முடியாது. அன்னத்தினின்று பிராண தத்துவம் உருவெடுக்கிறது. காலை உணவு கடினமானதாக இருக்கலாகாது. இரவில் ஏற்ற உணவில் பெரும்பகுதி ஜீரணமான பிறகே உறங்கப்போவது உசிதம். பகல் உணவு முக்கியமானதாகவும், வயிறு நிறையவும் இருக்கவேண்டும். ஆனால் ஜீரணக்கருவி களைப் பாழ்படுத்துகிற முரட்டு உணவை ஏற்கலாகாது. அதை ஒதுக்குதல் முற்றிலும் அவசியம். பழுதுபட்டவைகளும், ஊசிப்போனவைகளும் உண்பதற்கு உதவமாட்டா. திணறுகிற பாங்கில் தேவைக்கு மீறிய உண்டியை ஏற்கலாகாது.
முன்பு ஏற்ற உணவு முற்றிலும் செமித்துப்போக வேண்டும். பசி மிக எடுக்க வேண்டும். அதன் பிறகே புதிய உணவை உட்கொள்ள வேண்டும். அஜீரணத்தில் வருந்துகிறவன் தனக்கு விருப்பமாயுள்ள உணவைப் பிறர்க்கு எடுத்து மகிழ்வுடன் வழங்கி வருவானாகில் அவனுடைய ஜீரண சக்தி தானாக அதிகரிக்கிறது. அவ்வுணவைப் பிறர் மகிழ்வுடன் புசிப்பதைப் பார்த்து அவன் மிக ரசிக்கவேண்டும். தன்னிடத்து ஜீரண சக்தியை வளர்ப்பதற்கு அது உற்ற உபாயமாகிறது. 'உண்டிக்கழகு விருந் தோடு உண்ணல் என்பது மேலான கோட்பாடு. ஆசாரத் தின் பெயரால் சிலர் தனித்திருந்து உணவு ஏற்கின்றனர் ஆனால் பலருடன் கூடியிருந்து ஆகாரம் ஏற்பதே சாலச் சிறந்தது.
ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கு அது உற்ற உபாய்! மாகிறது
சமைப்பதற்கு இடையில் சுவை பார்க்கும் பழக்கம் சிலர்க்கிடையில் உண்டு. அது பொருந்தாத பழக்கம். நாவடங்கியிருந்தும், மன மடங்கியிருந்தும் சமைக்கிற உணவை வழிபடும் தெய்வத்துக்குப் படைக்க வேண்டும். இறைவனுக்குப் படைத்து அதைப் புனிதப்படுத்த அவனிடம் பிரார்த்தனை பண்ணவேண்டும்.உணவைக் கடவுளுக்குப் படைத்து உண்பதால் அது ஈசுவர பிரசாதமாக மாறுகிறது. உடலின் ஆரோக்கியத்துக் காகவும், திட்பத்துக்காகவும் அமைந்துள்ள தேவாமிர்தமாக அதைப் பாவித்தல் வேண்டும். தன் இனத்துடன் காகம் உணவைக் கலந்துண்பது போன்று உற்றாருடனும் விருந்தின ருடனும் கூடியிருந்து போஜனம் பண்ணுவது நல்ல பழக்க மாகும்.
பேருண்டிக்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். உடனடியாக உடல் உழைப்போ , மனோ முயற்சியோ செய்வது பொருந்தாது. உடனடியாக உறங்கப் போவதும் பொருந்தாது. பிறருடன் மகிழ்வுற்றிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகே உழைப்பில் ஈடுபடு தல் வேண்டும்.உணவு அருந்துகிற வேளையில் வியாகுலப்படுதல், சினந்துகொள்ளுதல், பொறாமைப்படுதல், பதைபதைப்புடன் இருத்தல் ஆகிய மனநிலைகள் பல கேடுகளை உண்டு பண் ணும். அது நோயாக வடிவெடுக்கும். இனிமையும், மகிழ்வும் உள்ளத்தில் குடிகொண்டிருப்பது முற்றிலும் அவசியம். அப்பொழுது உணவு அமிர்தமாக மாறுகிறது.
உண்ட உணவில் உடலுக்குப் பயன்படாத பகுதி மலமாக மாறுகிறது. அதே விதத்தில் உடலைச் சுத்தப்படுத் திய நீர் மூத்திரமாக மாறுகிறது. மலம், மூத்திரம் ஆகிய இவைகளிரண்டையும் அப்போதைக்கப்போது வெளிப் படுத்துவது உசிதம். மலக்கட்டும், மூத்திரக்கட்டும் பலவித மான நோய்களுக்கு ஏதுவாகின்றன. அதற்கு இடந்தராது பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்திருந் ததும் மலம், மூத்திரம் கழிவது நல்ல பழக்கம். பலபேர் பொது இடத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று மலஜலம் கழிக்கின்றனர். ஆரோக்கியத்துக்கு அது முற்றிலும் ஒவ் வாதது. இக்காலத்தில் நல்ல முறையில் கக்கூஸ்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.
அவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பின்பு அவைகளை மிகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். துர்நாற்றம் சிறிதளவும் ஆங்கு இருக்கலாகாது. மகாத்மா காந்தி ஒரு கோட்பாடு பகர்ந்துள்ளார். பூஜை அறை, சமையல் அறை, கக்கூஸ் ஆகிய மூன்றையும் எப் பொழுதுவேண்டுமானாலும் இடம் மாற்றிக்கொள்ளுகிற பாங்கில் அவைகளைச் சுத்தமாக வைத்திருக்கப் பயின்றிருக்கிற வர்களே பண்பட்டவர்களாம்.கக்கூஸ் இல்லாத கிராமத்துப் பக்கம் வாழ்ந்திருக்கிறவர்கள் தூரத்தில் சென்று சாகுபடி நிலத்தில் சிறிது மண்ணைத் தோண்டி அதில் மலஜலம் கழித்து மண்ணைப் போட்டு மூடிவைத்துவிட்டு வருவார்களானால் அது நல்ல பழக்கம் ஆகும். ஆரோக்கியத்துக்கு ஒத்திருப்பதோடு கூட பூமிக்கு அது நல்ல வளமாகிறது.
உலகில் உள்ள நாடுகளுள் சீனா தேசம் ஒன்றுதான் மலத்தையும், மூத்திரத்தையும் சிறிதள வும் வீண் போக விடாது பூமியில் போட்டு நிலவளத்தை நன்கு காத்து வருகின்றது. நம்மவர்களும் அம்முறையைக் கையாளக் கடமைப்பட்டிருக்கின் றனர் உடல் ஆரோக்கியத்துக்குக்கேற்ற அளவு மலத்திலும், மூத்திரத்திலும் துர்நாற்றம் குறைந்திருக்கும். துர்நாற்றம் அதிகப்பட்டிருப்பதற்கேற்ப உடலில் நோய் இடம் பெற்றிருக்கிறது என்பது வெளியாகிறது. கால்நடைகள் கடின மான சாணத்தையும் புழுக்கைகளையும் கழிக்கின்றன. அவைகள் நோய் வாய்ப்பட்டால் சாணமும், புழுக்கைகளும் அவைகளுக்குரிய வடிவத்தை இழந்துவிடுகின்றன. இதே கோட்.பாடு மனிதனுக்கும் உரியதாகிறது.
உடல் திட்பத்தோடு இருக்கிறவன் வெளிப்படுத்துகிற மலம் கெட்டியாகவும் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்
இக்காலத்திய மருத்துவத்துறை மனிதனுடைய மலத்தையும், மூத்திரத்தையும் ஆராய்ச்சி பண்ணி அவனைப் பிடித்துள்ள நோயைக் கண்டு பிடிக்கின்றது. மனிதன் எத்தகைய மலம் ஜலம் கழிக்கிறான் என்பதைப் பார்த்து அவன் தனக் குத்தானே தன் உடல்நிலையைக் கண்டுகொள்ள முடியும், நாள் ஒன்றுக்கு சுமார் ஐந்து தடவை சிறுநீர் பெருக்குவதும் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை மலம் விலக்குவதும் இன்றியமையாத செயல்களாகின்றன. இவை இரண்டும் நெடுநேரம் உடலிலே கட்டுண்டு கிடக்கிறபொழுது இவைகள் நஞ்சு ஆக மாறி நோயை வளர்க்கின்றன. ஆதலால் மலக் கட்டுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் இடம் கொடுக்கலாகாது. மலக்கட்டு என்னும் நோயில் வருந்துகிறவர்களும் உண்டு.
கருத்துகள் இல்லை