தூக்கம் sleeping beauty real story
தூக்கம் Sleeping beauty real story
தூக்கம்Sleeping beauty real story
தூக்கம் நோயாளிக்கு நல்ல நித்திரை கிடையாது. நன்கு தூங்கிப் பழகுவது நோயைத் தவிர்ப்பதற்கு உற்ற உபாயமாகும். பகல் உறக்கம் பொல்லாதது. 'உண்ட களைப்புதொண்டனுக்கும் உண்டு' என்பது கோட்பாடு. நண்பகலில் பேருண்டி புசிப்பவர் சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். சற்றுக் கண்வளரவும் செய்யலாம். ஆனால்நீண்ட நித்திரைக்கு மட்டும் பகலில் இடம்தரலாகாது. இனி,சிறு குழந்தைகள் அல்லும் பகலும் வேண்டியவாறு தூங்கலாம். மற்று, முதியோர்க்குப் பகல் துயில் வியா தியை வரு'விக்கும். தொண்டு கிழவனார்கள் குழந்தைகள் போன்றுஎப்பொழுது வேண்டுமானாலும் உறங்கலாம். அதிகாலையில்துயில் எழுந்திருப்பது எல்லார்க்கும் முற்றிலும் அவசியமானது. முகத்தை மூடிக்கொண்டு தூங்கலாகாது.
![]() |
sleeping beauty real story |
அப்படித் தூங்கினால் தன்னுடைய நச்சுக்காற்றே தனக்குப் புதியநோயை வருவிக்கும். தூங்குகிற அறையில் ஏராளமாகக்காற்றோட்டம் அமைந் திருப்பதுஅவசியம். வெளிச்சம்நிறைந்துள்ள அறை உறக்கத்துக்கு உதவாது.
மங்கியவெளிச்சம் ஒருவாறு ஆமோதிக்கப்படுகிறது. ஆனால் இருள்சூழ்ந்த அறையே முற்றிலும் பொருத்தமானது. தூங்குகிறஇடத்தில் இரைச்சல் ஏதும் இருக்கலாகாது. துர்நாற்றம்கமழும் சூழ்நிலையில் தூங்கலாகாது. துர்நாற்றம் எடுக்கும்படுக்கையை உபயோகப்படுத்தலாகாது.
வில் வைத்தகட்டிலில் படுத்துறங்கினால் உடல்வளைந் திருக்கும். அப்படி.
உடல் வளைந்திருப்பது ஆரோக்கியத்திற்குக் கேட்டைஉண்டுபண்ணுகிறது. அடுக்கு மெத்தை போட்டு சொகுசாகப் படுத்திருப்பதும் பொருந்தாது. கட்டிலின் மீது அல்லதுதரையின் மீது சமமாகவும், மிருதுவாகவும் இருக்கிற படுக்கையைப் பயன்படுத்துவது உத்தமம். தலையணை மிக உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ இருக்கலாகாது. தோளுக்கும் தலைக்குமிடையில் உள்ள உயரத்துக்கு ஏற்ற அளவே தலையணை அமைந் திருக்கவேண்டும். அது கடினமானதாக இருக்கலாகாது. மிருதுவாயிருத்தல் பொருட்டுத்தலையணை ஒன்றுக்கு மேல் ஒன்று இருக்கலாம். முதுகின்மீது நெடுநேரம் தொடர்ந்து உறங்குவது முறையன்று. நெடுநேரம் வலப்பக்கத்தில் அல்லது இடப்பக்கத்தில் உடலைவைத்து முதுகும் நெஞ்சும் நிமிர்ந்திருக்கிற பாங்கில் உறங்குவது சாலச் சிறந்தது. நோய்வாய்ப்பட்டிருக்கிறவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறங்கிக் கொண்டேயிருக்கலாம். நோயை அகற்றுதற்கு உற்ற உபாயங்களில்உறக்கம் மிக முக்கியமானது.
![]() |
sleeping beauty real story |
இனி, சிறு குழந்தைகள் அல்லும் பகலும் வேண்டியவாறு தூங்கலாம்.மற்று, முதியோர்க்குப் பகல் துயில் வியாதியை வருவிக்கும். தொண்டு கிழவனார்கள் குழந்தைகள் போன்று எப்பொழுது வேண்டுமானாலும் உறங்கலாம். அதிகாலையில் துயில் எழுந்திருப்பது எல்லார்க்கும்முற்றிலும் அவசியமானது. முகத்தை மூடிக்கொண்டு தூங்கலாகாது. அப்படித் தூங்கினால் தன்னுடைய நச்சுக்காற்றே தனக்குப் புதிய நோயை வருவிக்கும். தூங்குகிற அறையில் ஏராளமாகக் காற்றோட்டம் அமைந்திருப்பது அவசியம். வெளிச்சம் நிறைந்துள்ள அறை உறக்கத்துக்கு உதவாது.
மங்கிய வெளிச்சம் ஒருவாறு ஆமோதிக்கப்படுகிறது. ஆனால் இருள் சூழ்ந்த அறையே முற்றிலும் பொருத்தமானது. தூங்குகிற இடத்தில் இரைச்சல் ஏதும் இருக்கலாகாது. துர்நாற்றம் கமழும் சூழ்நிலையில் தூங்கலாகாது. துர்நாற்றம் எடுக்கும் படுக்கையை உபயோகப்படுத்தலாகாது. வில் வைத்த கட்டிலில் படுத்துறங்கினால் உடல் வளைந்திருக்கும். அப்படி. உடல் வளைந்திருப்பது ஆரோக்கியத்திற்குகேட்டை உண்டுபண்ணுகிறது. அடுக்கு மெத்தை போட்டு சொகுசாகப் படுத்திருப்பதும் பொருந்தாது. கட்டிலின் மீது அல்லது தரையின் மீது சமமாகவும், மிருதுவாகவும் இருக்கிற படுக்கையைப் பயன்படுத்துவதுஉத்தமம்.
தலையணை மிக உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ இருக்கலாகாது. தோளுக்கும் தலைக்குமிடையில் உள்ள உயரத்துக்கு ஏற்ற அளவே தலையணை அமைந் திருக்க வேண்டும். அது கடினமானதாக இருக்கலாகாது. மிருதுவாயிருத்தல் பொருட்டுத் தலையணை ஒன்றுக்கு மேல் ஒன்று இருக்கலாம். முதுகின் மீது நெடுநேரம் தொடர்ந்து உறங்குவது முறையன்று. நெடு நேரம் வலப்பக்கத்தில் அல்லது இடப்பக்கத்தில் உடலை வைத்து முதுகும் நெஞ்சும் நிமிர்ந்திருக்கிற பாங்கில் உறங்குவது சாலச் சிறந்தது. நோய்வாய்ப்பட்டிருக்கிறவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறங்கிக் கொண்டேயிருக்கலாம். நோயை அகற்றுதற்கு உற்ற உபாயங்களில் உறக்கம் மிக முக்கியமானது.
கருத்துகள் இல்லை