உணவு உண்ணும் முறை food borne system
உணவு உண்ணும் முறை food borne system
உணவு உண்ணும் முறைfood borne system
உணவு உண்ணாது எவ்வுயிரும் வாழ்ந்திருக்க முடியாது.பசி என்பது ஒரு பிணி. அதைப் போக்குதற்கு நாள்தோறும் ஆகாரம் ஏற்று ஆகவேண்டும். ஆனால் முறைதவறிஅதை ஏற்கலாகாது. முறையாக உண்டியை ஏற்பவன் பசிஎன்கிற பிணியை அகற்றுகிறான்.அளந்தெடுத்து ப்பொருத்தமான உணவை அருந்துகிறவன் மற்ற பிணி ஏதும்வராது தடுக்கிறான். 'மீதூண் விரும்பேல்' என்பது கோட்பாடு. தேவைக்குமேல் போஜனம் பண்ணலாகாது என்று எச்சரிக்கை பண்ணப்பட்டிருக்கிறது.
அளவுக்குட்பட்டுஆகாரம் பண்ணினால் ஜீரணக்கருவி பழுதுபடுவதில்லை. ஆயுள் காலமெல்லாம் அது நன்கு செயல்புரியும். குறிப்பிட்டகாலத்திலேயே சாப்பாட்டை ஏற்கவேண்டும். இடையிடையே நச்சுத்தீனி உண்ணலாகாது. இரவு படுக்கப்போகும்பொழுது உண்ட உணவில் பெரும்பகுதி ஜீரணமாயிருக்க வேண்டும். ஆதலால் உறங்கப்போவதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பே இரவு போஜனத்தை மனிதன்முடித்துவிடவேண்டும்.
அதிகாலையில் கடினமான உ.ணவைஏற்கலாகாது. நண்பகலில் பேருண்டியை வேண்டியவாறு ஏற்கலாம். பெரும்பான்மையான உயிர்கள் பொருத்தமான உணவு எது, பொருத்தமற்ற உணவு எது என்பதை மோப்பத்தால் நன்கு கண்டுபிடிக்கின்றன. ஆனால் மனிதனுக்கு முகத்தல் அறிவு மிகக்குறைவானது. ஆதலால் சுவை பார்ப்பது ஒன்றே அவனுக்கு ஏற்றதாகும்.
நல்ல உணவு எதுவயிற்றினுள் செலுத்தலாகாது. முன்பு உண்ட உணவுஎன்பதை நாக்கு கண்டுபிடிக்கிறது. நாவுக்கு ஒவ்வாத எளிதில் ஜீரணமாகிறதாவென்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். செமிப்பதற்குக் கடினமாயுள்ள ஆகாரத்தைக் குறைவாகப் புசிக்கவேண்டும். மற்று, அதைப் புசிக்காது ஒதுக்கி தாதுக்களையெல்லாம் ஜீரணக்கருவி செமித்து விடுகிறது.
ஆதலால்தான் உபவாசம் இருந்து பழகுகிறவர்களுக்கு நோய்வைப்பது அதைவிட உத்தமம். நல்லுணவை அளந்தெடுத்துஅருந்துபவனுக்கு ஆயுள் விருத்தி உண்டாகிறது, நோய்க்குஇடமில்லை.
பசி எடுத்த பின்பே புசித்தல்வேண்டும்.ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துதற்கு அதுவே உற்றஉபாயமாகும். பசியை ஒரு பிணி என்கிறோம். ஆயினும்பசிப்பிணியை நன்கு சகித்துப் பழகுபவனுக்கு ஏனைய பிணிகள் எளிதில் வரமாட்டா. இடையிடையே உபவாசம்இருப்பது நல்ல பயிற்சி. அது சமய அனுஷ்டானத்தோடு இணைத்து வைக்கப் பட்டிருக்கிறது. ஏகாதசியன்று, பிரதோஷத்தன்று, அமாவாசையன்று உண்ணாதிருப்பது நல்லபயிற்சி.
கருத்துகள் இல்லை