ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

தோல் நோய்கள்

 தோல் நோய்கள் ( skin disease ) , தேமல் , சொரியாஸிஸ், எக்ஸீமா , தோலில் அரிப்பு , தோல் புண்கள் சரி செய்வது எப்படி?

தோல் நோய்கள் ( skin disease ) , தேமல் , சொரியாஸிஸ், எக்ஸீமா , தோலில் அரிப்பு , தோல் புண்கள் சரி செய்வது எப்படி?



1. தோல் நோய் என்பது காற்று சம்பந்தப்பட்ட வியாதி, அதாவது உடலில் காற்று குறைந்து விட்டது என்று அர்த்தம். அதாவது ஆக்சிஜன் குறைந்து விட்டது என்று அர்த்தம். அல்லது காற்று கெட்டுப்போய் விட்டது என்று அர்த்தம். எனவே காற்றோட்டமான இடத்தில் வசிக்க வேண்டும் தூங்க வேண்டும்...

2. ஏர்கண்டிஷன் பயன்படுத்தக்கூடாது.

3. தூங்கும் பொழுது போர்வையை தலைக்கும் சேர்த்து போடக்கூடாது.

4. கொசுவத்தி , ஆல் அவுட் , குட்நைட் , ஓட மாஸ் பயன்படுத்தக்கூடாது.

5. படுக்கும் அறையில் பழைய காற்று வெளியே செல்லக் சென்று கொண்டே இருக்க வேண்டும் , புதிய காற்று உள்ளே வந்து கொண்டே இருக்க வேண்டும்.

6. வாழை இலை குளியல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

7. மண் குளியல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

8. முட்டைக்கோசை மிக்ஸியில் கூல் போல செய்து , சம அளவில் புத்து மண்ணை கலந்து உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் காத்திருந்து பின்னர் குளிக்க வேண்டும்‌

9. மயிலிறகு கொண்டு அடிக்கடி உடல் முழுவதும் விசிற வேண்டும்.

10. குளித்த பிறகு டர்க்கி டவல் பயன்படுத்தி உடலின் கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும்.

11. சின்னவெங்காயம் , துளசி இலை , கற்பூரவல்லி இலை , மிளகு , தூதுவளை இலை , முட்டைகோஸ் , திப்பிலி,  முள்ளங்கி ஆகிய பொருள்களை சமைத்தோ , சமைக்காமலோ,  சூப் வைத்து , ரசம் வைத்து எப்படியோ அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

12. பெருங்குடல் தூய்மையாக இருக்க , வாரம் ஒரு முறை இனிமா கொடுக்க வேண்டும். தோலுக்கும் பெருங்குடலும் சம்பந்தம் உண்டு

13. மூன்று மாதத்திற்கு ஒருமுறை பேதிக் சாப்பிட்டு பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டும்.


14. சுத்தமான பருத்தி ஆடை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

15. குளிப்பதற்கு டிவியில் விளம்பரம் வரும் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது. கடலை மாவு,  சீயக்காய் மற்றும் இயற்கை குளியல்பொடி பொடிகளை பயன்படுத்த வேண்டும்.

16. மாதம் ஒருமுறை 24 மணி நேரமும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு தண்ணீர் விரதமிருக்க வேண்டும்.

17. நாடி சுத்தி பிராணாயாமம் ,பஸ்திரிகா கபாலபதி ,அக்னிசார், சுதர்சன கிரியா போன்ற மூச்சு பயிற்சிகளை கண்டிப்பாக தொடர்ந்து தினமும் செய்தே ஆகவேண்டும்.

18. அதிகமாக பேசுபவர்களுக்கு தோல் வியாதி வரும். எனவே பேச்சை குறைக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் ,சொற்பொழிவாளர்கள், தலைப்பே இல்லாமல் ஆர்வக்கோளாறில் பேசுபவர்கள் இவர்கள் பேச்சை குறைக்க வேண்டும். அல்லது பேசும்பொழுது மூச்சு விட்டு பேச வேண்டும். தொடர்ந்து பேசும்போது தண்ணீர் , இளநீர் மோர் என பிடித்ததை நடுவில் குடித்து விட்டு பேச வேண்டும்.




கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}