ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

பேராசைகொண்டஅரசன்

              பேராசை கொண்ட அரசன்         
                                ஐரோப்பாவில் யூனான் என்னும் நாடு உள்ளது பழங்காலத்தில் யூனானில் மிடாஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரசன் மிகவும் பேராசைக்காரன் அவனுக்கு தன் அன்பு மகளை தவிர வேறு ஏதேனும் ஒரு பொருளின் மேல் ஆசை இருக்குமானால் அது தங்கம் தான். இரவு உறங்கும் போது கூட அவன் தங்கத்தை சேமிப்பது போன்ற கனவு கண்டு கொண்டிருந்தார்.
                                  ஒரு நாள் மிடாஸ் மன்னன் தன் பொக்கிஷ அறையில் அமர்ந்து தங்க கட்டிகளையும் தங்க நாணயங்களையும் எண்ணிக்கொண்டிருந்தான். திடீரென்று அங்கு ஒரு தேவதூதன் தோன்றினான்  அவன் தங்கத்தின் மீது கொண்டுள்ள ஆசை பார்த்து நீ பெரிய பணக்காரன் என்று சொன்னான். மிடாஸ் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பதில் சொன்னான். மிக குறைந்த அளவே தங்கம் உள்ள நான் எப்படி பணக்காரனாவேன் என்று  சொன்னான் உனக்கு சந்தோஷம் இல்லையா உனக்கு இன்னும் எவ்வளவு தங்கம் வேண்டும் என்று தேவதூதன் கேட்டான்.
                      நான் எந்தப் பொருளைத் தொட்டாலும் அது  தங்கமாக மாறி விட வேண்டும் என்று விரும்புகிறேன். தேவதூதன் சிரித்து விட்டு சொன்னான் நாளை காலை  வேலையில் இருந்து எந்தப் பொருளைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாறும் என்று கூறி மறைந்துவிட்டான். அன்றிரவு தூக்கமே வரவில்லை மிகவும் அதிகாலையிலேயே எழுந்து விட்டான் அவன் ஒரு நாற்காலியை தொட்டபோது  நாற்காலி  தங்கமாக மாறியது மகிழ்ச்சியோடு  நடனமாட தொடங்கினான்.
                            அவனுடைய நந்தவனத்திற்கு சென்று  பூக்கள் பழங்கள் இலைகள் கிளைகள் பூந்தொட்டிகள் அனைத்தையம் தொட்டான்.   எல்லாம் தங்கமாக மாறி விட்டது. அலைந்து திரிந்து களைத்து விட்டான் அவன் ஆடை  கூட தங்கமாக மாறி மிகவும் கனமாக ஆகிவிட்டதை அவன் அறியவில்லை அவனுக்கு தாகமும் பசியும் உண்டாகியது.  நந்தவனத்தில் இருந்து தன்னுடைய அரண்மனைக்கு வந்து ஒரு தங்க நாற்காலியில் உட்கார்ந்தான். ஒரு வேலைக்காரன் அவன் முன்னால்  நீரும் பழமும் கொண்டுவந்து வைத்தான். முன்புபோல் உணவருந்துவதற்கு தட்டில் கை வைத்தவுடன் எல்லா சாப்பாடும்  நீரும்   கோப்பையை தொட்டதும் தங்கம் ஆகியது .
                              தங்க உருளைக்கிழங்கு வைக்கப்பட்டிருந்தன .தங்கத்தை  உண்டு   பசி தீர முடியுமா   அழத்தொடங்கினான்.   அதே சமயம் அவளது மகள் விளையாடிக்கொண்டே அங்கு வந்தால் அதை பார்த்து அவன் மடியில் ஏறி அவனுடைய கண்ணீரைத் துடைக்கத் தொடங்கினாள்.   அரசன் தழுவிக்கொண்டான் ஆனால் அவன்   மடியில் தாங்க முடியாத  கணத்தில் தங்க உருவமாக இருந்தாள்.  தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினான் தேவனுக்கு இறக்கம் வந்தது. அவன் மறுபடியும் தோன்றினான். அவனைப் பார்த்ததும் அவன் கால்களில் விழுந்து நடுங்கிக்கொண்டே துடிக்க தொடங்கினான். நீங்கள் உங்கள் வரத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் தேவதூதன் கேட்டார்.
                                   உனக்கு இப்போது தங்கம் வேண்டாமா ஒரு கோப்பை தண்ணீரா  அல்லது தங்கமா ஒரு ரொட்டித் துண்டு சிறந்ததா அல்லது தங்கமா கைகூப்பி கொண்டு சொன்னான். எனக்கு தங்கம் வேண்டாம் மனிதனுக்கு தேவையற்றது. என்று நான் அறிந்து கொண்டேன். தங்கம் இல்லாமல் மனிதனுக்கு எந்த வேலையும் தடைபடாது ஒரு குவளை நீரும்  ஒரு கவளம் சோறு மின்றி எந்த வேலையும் மனிதனுக்கு நடக்காது.  பேராசை படமாட்டேன் என்றான்.  நீரை கொடுத்து இதை எல்லாவற்ற்றின் மேலும்   தெளித்து  விடு என்று சொன்னான். அந்த நீரை தன் மகள். மேஜை நாற்காலி, உணவு, தண்ணீர் மற்றும் பூந்தோட்டத்தில் உள்ள மரங்கள் எல்லாவற்றிலும் தெளித்தான்  எல்லா பொருட்களும் முன்பிருந்தது போலவே மாறிவிட்டன போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}