சீனி வெள்ளை சர்க்கரை How To Use White Sugar

 

சீனி வெள்ளை சர்க்கரை How To Use White Sugar 

ரும்பு ஏன் அதிகம் பயிரிடப்படுகிறது?

நாம் இன்று இந்த வினாவினை எவரிடமாவது கேட்டால் உடனே நமக்கு கிடைக்கும் பதில் என்னவென்றால் சர்க்கரை தயாரிப்பு. வெள்ளை சர்க்கரை இன்று அனைவரின் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. சரி, இந்த சர்க்கரை தயாரிக்கத்தான் கரும்பு பயிரிடப்படுகிறதா என்று ஆராய்ந்தால் உண்மை பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆம். எந்த ஒரு கணத்திலும் நாம் கணக்கெடுத்து பார்ப்போமேயானால் எட்டு பூமிக்கு தேவையான சர்க்கரை நம்மிடம் இருக்கிறது. பின் எதற்காக இத்தனை கரும்பு பயிரிடப்படுகிறது என்று நாம் யோசித்ததில்லை. தண்ணீர் இல்லை என்று போராட்டம் நடத்துகிறோம். பின்னர் மிகவும் தண்ணீர் தேவைப்படும் கரும்பை அதிக அளவில் தேவை இல்லாமல் தயாரிக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு?

இதனை புரிந்து கொள்ள வெல்லப்பாகை பளபள சர்க்கரையாக மற்றும் தொழில்நுட்பத்தை ஆராய வேண்டும். இந்த தொழில் நுட்பத்தினால் நமக்கு கிடைக்கும் இரண்டு பொருட்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் சாராயம்! ஆம். சுத்திகரிப்பு முறையின் ஒரு முக்கிய உப உற்பத்தி (byproduct) சாராயம். நூறு கிலோ கரும்பிலிருந்து இருநூறு லிட்டர் மொலாசஸ் (Molasses) கசடு கிடைக்கும். இந்த திரவம் பதப்படுத்தப் சாராயத்தின் முக்கிய மூலப்பொருளான எத்தில் ஆல்கஹாலாக  (Ethyl Alcohol) மாறுகிறது. இந்தியா தான் உலகக் மொலாசஸ் கசடை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு என்பது மற்றொரு வேதனைக்குரிய விசயம்.

சீனி வெள்ளை சர்க்கரை How To Use White Sugar


White Sugar முதலில் வெள்ளை சர்க்கரையை பற்றி  தெரிந்துகொள்வோம். கரும்பிலிருந்து சர்க்கரையை பிரித்து எடுக்கும்நவீனமுறையில், பசு முதலான கால்நடைகளின் எலும்புதுகள்களும், வெள்ளை நிறம் கொடுக்க இரும்பிலிருந்து அகற்றும் பாஸ்பாரிக் அமிலமும் பெருமளவி பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அந்தச் சர்க்கரை எப்போதும் கட்டி ஆகாமல் துகள்களாக இருப்பதற்கு ஒரு இரசாயனம், நீர் புகாமல் இருப்பதற்கு ஒரு இரசாயனம், வருடங்களுக்கும் கெடாமல் இருப்பதற்கு ஒரு இரசாயனம் என ஒரு நீண்ட இரசாயனக் குளியலை முடித்துதான் நம் வீட்டிற்கு வருகிறது. இதனை ஒவ்வொரு முறை காபி அல்லது தேநீருடன் கலக்கும் பொது நினைவில் கொள்ள வேண்டும். நான் எனது குழந்தைகளிடம் இதை எல்லாம் விளக்கி நாட்டு சர்க்கரை வேண்டுமா, மாட்டு சர்க்கரை வேண்டுமா என்று நகைச்சுவையாக கேட்க தொடங்கியவுடன் எளிதில் நாட்டு சர்க்கரைக்கு மாறிவிட்டனர். உண்மையை கூற வேண்டுமானால், வெள்ளை சர்க்கரை நமக்கு தேவை இல்லாத பொருள். நாம் ஒவ்வொருவரும் நலமாக இயங்குவதற்கு நமக்கு குளுக்கோஸ் அவசியம். நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் (பாகற்காய் உடபட குளுக்கோஸ் இருக்கிறது. இதற்கு இயற்கை இனிப்பு Sugars) என்று பெயர். இயற்கை இனிப்பு, சர்க்கரை நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் சேர்ந்தது இதனை உட்கொண்டால்  நம் உடல்  ரத்தத்தில் சர்க்கரை சத்தை தேவையான அளவு மட்டும்,மிக சீராக வெளியேற்றும். இது உடலுக்கும் நல்லது, ஆரோக்கியமானது. ஆனால் வெள்ளை சர்க்கரை வடிவத்தில் நாம் உண்பது செயற்கை இனிப்பு (Simple Added Sugars). இது குறுகிய நேரத்தில் மிக அதிக சர்க்க ரை சுமையை (High Glycaemic) ரத்தத்தில் ஏற்றி உள்ளுறுப்புகளை பாதிக்கும். எனவே உற்று நோக்கினால் நம் தொழில் நுட்பம் நம்மை நோயாளியாகத் தான் மாற்றுகிறது என்ற புரிதல் ஏற்படும்.

வெள்ளை சர்க்கரை நேரடி வடிவில் ஏற்படுத்தும் தீமைகள் சிலருக்கு புரிந்திருக்கலாம். ஆனால் மறைமுகமாக இந்த வெள்ளை விஷம் பன்னாட்டு நிறுவனங்களால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் கலந்துள்ளது. நாம் காலையில் தொடங்கும் பற்பசையிலிருந்து, ஹார்லிக்ஸ் காம்பிளான் போன்ற சத்து பானங்கள், பழச்சாறுகள், ஜாம், ரொட்டி, பிஸ்கட், கேக், நொறுக்கு தீனிகள் என ஒவ்வொரு பொருளிலும் ஏராளமான சர்க்கரை கொட்டப்படுகிறது. ஏன் நாம் உண்ணும் 50-50, மொனாகோ போன்ற உப்பு பிஸ்கட்டின் உறையை பார்த்தால் அதிலும் 40 சதவிகிதத்திற்கு மேல் வெள்ளை சர்க்கரையை சேர்க்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். லேஸ், குர்குரே போன்ற அனைத்திலும் வெள்ளை சர்க்கரை மறைந்துள்ளது.

நம் மண்ணின் நீரை உறிஞ்சி வளர்க்கப்படும் இந்த கரும்பினால் நமக்கு கிடைக்கும் அடுத்த விஷம் சாராயம். இதனால் ஏற்படும் கேடுகள் நம் அனைவருக்கும் தெரிந்ததே. போதைக்கு அடிமையாகி சீரழிந்த குடும்பங்கள் பல. இதில் அரசாங்கமே ஈடுபடுவது வெட்கக் கேடான விசயம். விவசாயி என்பவன் உணவை விளைவிப்பதால் இறைவனாக போற்றப்படுகிறான். ஆனால் வெறும் பணத்தில் மீது மோகம் கொண்டு நமது நீர்நிலை பற்றிய அக்கறை இல்லாமல் விஷங்களை விளைவிப்பவன் விவசாயியா? உணவை விளைவிக்கும் விவசாயிக்கு கிடைக்காத மானியம் இத்தகைய விஷங்களை விளைவிப்பு கிடைக்கிறது. நமது சுற்றுசூழலையும் நீராதாரத்தையும் பாழ்படுத்தி பணத்தையே நோக்கமாக கொண்டு கரும்பு விளைவிக்க வேண்டுமா? உலகில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் சர்க்கரை பயன்பாட்டில் முதலிடம் நம் தாய்த்திரு நாட்டிற்கே என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயமா? - முக்கால் நூற்றாண்டில் பல்கிப்பெருகிய இவ்வணிகக் வளர்ச்சியும், நம்மிடையே உயர்ந்து வரும் உடற்பருமன், சர்க்கரை நோய், இருதய நோய், கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கைக்க நேரடித் தொடர்பு இருப்பதை அறிவியலாளர்கள் நேரடியாக அறிவிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து நாட்டு சர்க்கரை, கருப்பட்டி என்று அழைக்கப்படும் பனை வெல்லம் போன்ற பொருட்களுக்கு மாற வேண்டும். கருப்பட்டியால் நமக்கு கிடைக்கும் பயனை விட பனை மரத்தால் நம் நிலத்திற்கு கிடைக்கும் நன்மை பன்மடங்கு. நிலத்தடி நீரை உயர்த்தும் திறன் பனை மரத்துக்கே உரிய சிறப்பு. கள்ளை ஒழிக்கிறேன் என்று பனை மரங்களை அழித்தது நமது அறியாமையின் உச்சம். கள்ளை ஒழித்து விட்டு தண்ணீரை உறிஞ்சும் கரும்பை பயிரிட்டு சாராயம் தயாரிப்பது தான் நாம் அறிந்த விஞ்ஞானம்.


சீனி வெள்ளை சர்க்கரை How To Use White Sugar

"வெள்ளைச் சர்க்கரை ஒரு விஷம்!" என முன்னோடி மருத்துவர்களும் சொல்லத் தொடங்கிவிட்டனர். சர்க்கரை நோய், இரத்தகொதிப்பு முதலான பெரும்பாலான நோய்களுக்கு, கொழுப்புச்சத்தை குறை கூறும் நாம், வெள்ளைச் சர்க்கரை சேர்ந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் இனிப்புச்சத்தும் முக்கிய காரணம் தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும், மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி, நாம் உண்டு முடிக்கையில், "உண்ட உணவு போதும்என நமக்கு அறிவிக்கிறது. ஆனால் வெள்ளைச் சர்க்கரை சேர்ந்த பண்டங்களை (கோலாபானம்/பாஸ்ட் புட்) சாப்பிடும்போது, அதிலுள்ள


சுக்ரோஸ் (Sucrose) எனும் சர்க்கரை மூலப்பொருள் அதிகப்படியாக இருப்பதால், அது மூளையின் குறிப்பிட்ட பகுதியின் செயலை அச்சமயம் பழுதாக்கி விடுகிறது. அதனால் "உண்டது போதும்" என்னும் அறிவிப்பு நமக்கு மூளையிடமிந்து கிடைப்பதில்லை. இதனால்தான், நவீன பாஸ்ட் புட் மையங்களில் உணவோடு கோலா பானங்களும் கொடுக்கப்படுகின்றன. அவர்களுக்கு வியாபாரம்! நமக்கு வியாதி! என்ன ஒரு உடன்படிக்கை பார்த்தீர்களா?

ஏன் டாக்டர், காலை காபிக்கு ஒரு ஸ்பூன், மாலை டீக்கு ஒரு ஸ்பூன்! அதுக்கு இவ்வளவு அக்கப்போரா?" என்று நீங்கள் நினைக்கலாம். அந்த காபி, டீ மட்டும் இல்லாமல், போகிற போக்கில் நாம் அருந்தும் ஒரு கோலா பானத்தில் 10 ஸ்பூன் சர்க்கரையை உள்ளிழுப்பதும், ஒரு கேக், ஜாம் பன், பப்ஸ், பிஸ்கட்டில் 3 ஸ்பூன் சர்க்கரை உண்பதும், எளிதாக நம் கண்ணை மறைக்கும் சமாச்சாரங்கள். நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான சர்க்கரை நம் தானியங்களிலும், காய்கனியிலும் கிடைக்கிறது. இது தவிர நாம் அதிகப்படியாக உட்கொள்ளும் அனைத்துமே தேவை இல்லாத சர்க்கரை தான் என்பதும், தேவையை மீறிய ஒரு ஸ்பூன் சர்க்கரையை எரிப்பதற்கு 20 நிமிட துரித நடைப்பயிற்சி வேண்டும் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

இது தெரியாமல் தானோ, என்னவோ நம்மில் நான்கில் ஒருவர் சர்க்கரை நோயாளியாகவும், மூன்றில் ஒருவர் இருதய பாதிப்பு உடையவராகவும் மாறி இருக்கிறோம் என்பதை நினைவில் வைப்பது நல்லது.

நான்கில் ஒருவராக உள்ள அந்த சர்க்கரை நோயாளி பற்றிய கவலை இப்போது இல்லை. இயற்கையே அவர்களுக்கான சர்க்கரைப் பத்தியத்தைத் தந்தாகிவிட்டது! மீதமுள்ள மூவரில் நீங்களும் ஒருவராக இருந்தாலோ, உங்கள் இல்லத்தில் வளரும் குழந்தை இருந்தாலோ வெள்ளை சர்க்கரைக்கு முழுக்குப்போட்டுவிட்டு நம் பாரம்பரிய இனிப்பூட்டிகளுக்கு மாறும்   நேரம் இதுதான்!


இடித்த மாவினை வேக வைத்து வெல்லப்பாகினை சேர்த்துக்கட்டிய எள்ளுருண்டை, பாசிப்பயறு மாவு உருல அக்கார வடிசல் (சர்க்கரைப் பொங்கல்), அதிரசம், மோதகம், பணியாரம், பஞ்சாமிர்தம், பொரி விளங்காய் வகை வகையாய், இனிப்போடு உடலுக்கும் ஊட்டம் ள்ள பண்டங்களை நாம் ஒன்றும் அறியாமல் இருந்ததில்லை. ஒவ்வொன்றுமே நார்ச்சத்து, புரதம், கனிமச் சத்துக்களை வள குழந்தைகளுக்கும், விடலைப் பருவத்தினருக்கும் இனிப்பாய் அள்ளி வழங்கியவை. இவை அனைத்திற்குமே இனிப்பின் மூலப்பொருளாய் இருந்தது பெரும்பாலும் தேன், வெல்லம் மற்றும் கருப்பட்டி மட்டுமே.

நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லத்திலும் வெண்மை நிறம் ஏற ஆக்ஸாலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுள் சென்று சிறுநீரகக் கல்லை உண்டாக்குகிறது. கெமிக்கல் கலப்படம் அல்லாத நாட்டு சர்க்கரை / வெல்லம் கடைகளில் கிடைக்கும். இவை கருப்பு ஏறியதும், இள மஞ்சளுமாக இருக்கும். மேலும் பூச்சிமருந்து கலக்காத கரும்பு பயிர்களின் ஆர்கானிக் வெல்லமும் கடைகளில் கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்துவதே சிறந்தது. மேலும், நீரை உறிஞ்சம் தன்மை கெமிக்கல் கலப்படமில்லாத வெல்லத்திற்கு உண்டு. ஆதலால், பிசுபிசுத்துப் போகலாம். கவலை வேண்டாம். பானையிலோ, பீங்கான் பாத்திரத்திலோ பத்திரப்படுத்தி வைக்கலாம்.

வளரும் குழந்தைகளை அடிமைப் பழக்கத்திற்குத் தள்ளும் சாக்லட்டுகளிலிருந்து காத்து, ஆரோக்கியம் தரும் பாரம்பரிய இனிப்புக்கு மாற்றுவது ஒவ்வொரு பெற்றோரின் தார்மீகக் கடமை


 

இரத்தக் குழாயில் அடைப்பு சரியாக How To Lose Blood Vessel Blockage

 

இரத்தக் குழாயில் அடைப்பு சரியாக How To Lose Blood Vessel Blockage 

 

இன்றைய சூழ்நிலையில் யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும், ஆரோக்கியம் இல்லாமல் போகலாம் (ஹார்ட் அட்டாக் வரலாம்). ஐந்து நிமிடத்தில் உயிர் போனவரும் உண்டு. ஐந்து மணிநேரம் தாக்குபிடித்து வைத்தியம் பார்த்து உயிர் பிழைத்தவரும் உண்டு. ஹார்ட் அட்டாக்கிற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்


இரத்தக் குழாயில் அடைப்பு சரியாக How To Lose Blood Vessel Blockage

ஆனால் ஹார்ட் அட்டாக்கிற்கு இருதயம் மட்டும் காரணம் அல்ல! |

இருதயம் ஒரு பம்பிங் ஸ்டேஷன் மட்டுமே. தனக்குள் வரும் இரத்தம் ஒரே சீராக வராமல் இருக்கும்பொழுது இருதயம் திணறும். அதே மாதிரி தனக்குள் வந்த இரத்தத்தை அழுத்தமாக வெளியே போகும் இரத்தக்குழாய்க்குள் தள்ளும்போது சரியாக போகாவிட்டால் வலி ஏற்படும். இருதய துடிப்பும் நிற்க துவங்கும். இதுவே ஹார்ட் அட்டாக். இப்பொழுது உடலில் நுரையீரல் காற்றை உள்ளே இழுத்து, வெளியில் விடுவதை நிறுத்த ஆரம்பிக்கும். இந்த நிலையில் மருத்துவமனையில் டாக்டர்கள் நுரையீரல் பகுதியை மேலும் கீழுமாக அழுத்தி, அந்த உடல் சுவாசித்து மூச்சை இழுத்துவிட முயற்சி செய்வார்கள். முடியாதபொழுது செயற்கை முறையில் அந்த உடல் சுவாசிக்க ஆக்ஸிஜன் சிலிண்டர் குழாயில் இணைத்த முகமூடியை மூக்கின் மேல் மாட்டி சுவாசிக்க விடுவார்கள். சில நேரங்களில் லேசான மின் அதிர்ச்சி கொடுத்து நுரையீரலை இயக்க முயற்சி செய்வார்கள். சில நேரங்களில் முயற்சி வெற்றி பெறும். சில நேரங்களில் முடியாமல் போகும்.

இருதயத்திற்கு வரும் இரத்தக் குழாயிலும், வெளியேறும் இரத்தக் குழாயிலும் கடுமையான அடைப்பு காரணமாக, இருதயம் இரத்தத்தை பம்ப் செய்யமுடியாது. அப்பொழுது ஹார்ட் பீட் குறைய ஆரம்பிக்கும் அவரது நுரையீரல் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் செயலும் சிறிது சிறிதாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இருதய துடிப்பு குறைய ஆரம்பிக்கும். இரத்தம் உடலில் ஓடாததால் உடல் ஜில்லிட்டு உயிர் போய்விடும். இந்த நிலை உடலில் உடனே ஏற்படுவதில்லை. இதற்கு முன் இரண்டு தடவை இதேமாதிரி லேசாக ஏற்பட்டிருக்கும். இது மூன்றாவது தடவை. இந்த தடவை கடுமையாக ஏற்பட்டிருக்கிறது.

சிறிது காலமாகவே அவருடைய இரத்தக்குழாய்களில் கால்சியமும், கொழுப்பு சத்தும் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்திருக்கும். சில வேளைகளில் அவருக்கு மூச்சுத் திணறல் வர ஆரம்பிக்கும். அப்பொழுதே இரத்தக் குழாய்களில் படிந்துள்ள கால்சியத்தையும், கொழுப்பையும் சிறுநீரில் வெளியேற்றியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.)

இதற்கு எளியவழி இரத்தக் குழாய்களின் உட்பகுதியில் கால்சியமும், கொழுப்பும் படியாமல் இருக்க முயற்சி செய்திருந்தால் அடைப்பு ஏற்பட்டிருக்காது. இந்த அடைப்பு ஏற்படாமல் நம்மால் செய்ய முடியும்.

கால்சியம் உடல் உறுதியாவதற்கும், எலும்புகள் வளர்ந்து உடலை தாங்கும் சக்தி பலமாவதற்கும் வேண்டும். உடலில் கால்சியம் சேமித்து வைக்க முடியாது... தேவைக்கு போக மீதம் இருக்கும் கால்சியம் சிறுநீரில் வெளியேறிவிடும். இதை நம் உடல் செய்துவிடும்.

கொழுப்பு அவசியம் தேவை உடலுக்கு, தேவையான கொழுப்பு சத்தை நமது உடலிலுள்ள கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. தேவையான கொழுப்பு மட்டுமே சேமிக்கப்படுகிறது. மீதம் உள்ள கொழுப்புகள் மனிதனின் தசைப்பகுதியில் தேங்க ஆரம்பிக்கிறது. இப்பொழுதுதான் உடல் பருமனாக குண்டாக ஆக்கப்படுகிறது. இப்படித்தான் உடல், கணமான தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறது. மேலும், மேலும் கொழுப்பு சத்து உணவையே உட்கொள்ளுவதால், இரத்தக் குழாய் உட்புறமும் கொழுப்பு படிய ஆரம்பிக்கிறது.

கொழுப்பும் நரம்புகளின் பாதையை குறுகலாக ஆக்கிவிடுகிறது. இதனால் இருதயத்திற்கு வெளியேயும், உள்ளேயும் செல்லும் நரம்புகளில் முற்றிலும் தடை ஏற்படுத்தி இரத்தம் இருதயத்திற்கு உள்ளே செல்ல முடியவதில்லை . இருதயம் செயல் இழந்து ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கின்றது.

இதற்கு எளிய வழி ஒன்று இருக்கிறது. 'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை

சுப்ரமணிய சுவாமிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை ' என்று கிராமங்களில் கூறுவார்கள்.

பிரசவித்த தாய்மார்களுக்கு சிறிது காலத்திற்கு பிறகு இஞ்சி சாறு எடுத்து கஷாயம் செய்து தருவார்கள். பிரசவித்த கர்ப்பப்பை சுருங்கி உடலில் அது இருந்த இடத்தில் பழையபடி அமைந்து, அடுத்த பிரசவம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தயாராகி விடும்.

 

கிராமங்களில் சுக்குமல்லி காபி குடிப்பது வழக்கம்.

இது ஒரு ஆரோக்கிய பானம். இதன் விபரம் அறிந்தவர்கள் இன்றும் இந்த காபியை அருந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த காபியை காலையும், மாலையும் அருந்திவந்தால் நரம்புகளில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்யும் கால்சியத்தையும் கொழுப்பையும் முற்றிலும் கரைத்து, சிறுநீரில் வெளியேற்றிவிடும். இருதயத்திற்கு இரத்த நாளங்களிலிருந்து இரத்தம் தடையில்லாமல் வந்து உடம்பிலுள்ள எல்லா பாகங்களுக்கும் இரத்தம் தடையில்லாமல் போய் சேரும். ஹார்ட் அட்டாக் வரவே வராது. இரத்தம் வேகமாக சீராக உடலின் எல்லா பாகங்களில் உள்ள நரம்புகளில் ஓடுவதால் எந்த வகை வலிகளும் ஏற்பட வழியில்லை . இடுப்புவலி, முதுகுவலி, கால் வலி, கைவலி, தலைவலி, கழுத்துவலி எந்த வலியும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். கொழுப்பை கரைக்கும் சக்தி கொத்துமல்லி விதைக்கு உண்டு.

சுக்குமல்லி காபியை நாமே தரமாக தயாரித்துக் கொள்ளலாம். அந்த முறையைப் பார்ப்போம். தரமான நாட்டு மருந்து கடையில் நூறு கிராம் சுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். சுக்கை நன்றாக பதப்படுத்தி வைத்திருப்பார்கள். இஞ்சிதான் காய்ந்து சுக்காக மாறுகிறது. இஞ்சி தரையின் கீழ் பூமியில்உண்டாகிறது. இஞ்சி தனக்கு வேண்டிய காரசத்தினை, பூமியிலிருந்து உறிஞ்சும்போது வேண்டாத கழிவுகளை, இஞ்சியின் மேல்தோல் தடுத்து காரசத்தை மட்டும் இஞ்சி எடுத்துக் கொள்கிறது. |

இஞ்சியை நாம் சமையலுக்கு பயன்படுத்தும்போது தோலை நன்றாக சீவி எடுத்து விட்டுத்தான் பயன்படுத்தவேண்டும். அதேபோல சுக்குமல்லி காபிக்கு பயன்படுத்தும் பொழுது, சுக்கின் மேலுள்ள தோலை நன்கு அறவே நீக்கித்தான் பயன்படுத்தவேண்டும். நீங்கள் வாங்கிய சுக்கை நன்றாக கத்தியால் தோலை நீக்கி, ஒரு மண்சட்டியில் போட்டு சூடாக்கி வறுத்தெடுங்கள், பொன்வறுவலாக லேசாக வறுத்தால் போதுமானது. கருகவிட்டு விடாதீர்கள். பிறகு 50 கிராம் கொத்தமல்லி விதையை புதியதாக உள்ளதையும், மண்சட்டியில் போட்டு பொன்வருவலாக லேசாக, வாசனை வரும்படி வறுத்தெடுங்கள். இரண்டு பொருட்களையும் நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். இப்பொழுது சுக்குமல்லி காபி பொடி தயார்.

அடுப்பில் இரண்டு டம்ளர் நீர் வைத்து கொதிக்க விடுங்கள். இப்பொழுது சுக்குமல்லி காபி பொடியை இரண்டு கரண்டி அளவு போட்டு சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். பிறகு அதில் உங்கள் ருசிக்கு ஏற்ற அளவு பனங்கருப்பட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். சுக்கின் காரம் நம் நாக்கு ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மிக குறைவான அளவே பனங்கருப்பட்டி சேர்க்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. சர்க்கரையை சிலபேர் -ஜீனி என்று கூறுவார்கள். இதேபோல பாலும் சேர்க்கக் கூடாது. |

இந்த பானத்தை தினசரி காலை மாலையில் பருகிவந்தால், உங்கள் ரத்தக்குழாயில் படிந்துள்ள கால்சியமும், கொழுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, சிறுநீரில் வெளியேறிவிடும். ஹார்ட் அட்டாக் எந்த காலத்திலும் வராது. இரத்த தடையினால் ஏற்படும் வலிகள் ஏதும் வராது. இது ஒரு ஆரோக்கிய பானம். இது மருந்தில்லா மருத்துவம். சுக்கும் மல்லியும் நாம் பயன்டுத்தும் சமையல் அறை பொருட்களே இதனால் எந்த பக்கவிளைவுகளும் உண்டாகாது. நாம் செய்து பயனடையலாமே!

 

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}